Watch: தார் டின்னில் 3 நாட்களாக சிக்கி இறுகிப்போன இளைஞர்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Watch: தார் டின்னில் 3 நாட்களாக சிக்கி இறுகிப்போன இளைஞர்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!



Andhra Pradesh NTR District Road Worker Stuck in Ashbritt Tar Bin

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள என்.டி.ஆர் மாவட்டத்தில் சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேற்கொள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவருடன் பணியாற்றிய வந்த தொழிலாளர் ஒருவர், எதிர்பாராத விதமாக தார் கேனுக்குள் சிக்கி இருக்கிறார். அவர் கடந்த 3 நாட்களாக கேனுக்குள் சிக்கி தவித்து இருக்கிறார். 

உள்ளூர் மக்கள் அவரை நேற்று கண்டுபிடிக்க, அவரின் உடல் பாதி அளவில் தாருக்குள் சிக்கி இறுகி இருக்கிறது. பின் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தீயணைப்பு படையினர் உதவியுடன் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பின் இளைஞர் அவர் மீட்கப்பட்டுள்ளார்.