கொரோனா வைரஸ் தன்னை தாக்கியதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட நபர்...!

கொரோனா வைரஸ் தன்னை தாக்கியதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட நபர்...!



Andhra man suicide because of corono virus fear

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், தன்னை கொரோனா வைரஸ் தாகிவிட்டதாக நினைத்து ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் சித்தூரை அடுத்த தொட்டம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான பாலகிருஷ்ணையா. இவர் உடல் சரியில்லாத நிலையில் மருத்துவ ஆலோசனைக்காக மருத்துவர்களை சந்தித்துள்ளார். பாலகிருஷ்ணையாவை சோதித்த மருத்துவர்கள் இதயம் பலவீனமாக இருப்பதாகவும் வெளியிடங்களுக்கு செல்லும்போது தூசுகளை தவிர்க்க மாஸ்க் அணியும் படியும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

corono

மருத்துவர்கள் மாஸ்க் அணி சொன்னதை காரனாக வைத்து, தனக்கு கொரோனா வைரஸ் வந்துவிட்டதாக நினைத்து மன உளைச்சலில் இருந்துள்ளார் பாலகிருஷ்ணையா. மருத்துவர்களும், உறவினர்களும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.

மேலும், யாரும் தன்னிடம் நெருங்கி வரவேண்டாம் என்று கூறியபடி இருந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல், தன்னால் கிராமத்திற்கு ஆபத்து வரும் என நினைத்து தற்கொலை செய்துகொண்டார் பாலகிருஷ்ணையா. கொரோனா வைரஸால் மறைமுகமாக இந்தியாவில் ஒரு உயிர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.