பெற்ற குழந்தையை மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கொடூரம்...!!

பெற்ற குழந்தையை மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கொடூரம்...!!



a-three-month-old-baby-was-killed-by-its-mother-by-thro

பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையை அதன் தாயே மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்துள்ளார். 

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் பெட்லெட் பகுதியில் வசிப்பவர் ஆசிப். இவரது மனைவி பெர்சானாபானு மலிக் (23). பெர்சானாபானுவுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பெர்சானாபானுவுக்கு, வதோதராவில் இருக்கும் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. உடல்நலம் குன்றிய நிலையில் குழந்தை இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

அதன் பின்னர், பெர்சானாபானு தனது குழந்தை அம்ரீன்பானு உடன் வீட்டிற்கு சென்றார். கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி குழந்தை அம்ரீன் பானுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே நடீட் நகரில் இருக்கும் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தையின் உடல்நலம் மோசமடைந்ததால் அகமதாபாத்தின் அசர்வா நகரில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்த நிலையில், நேற்று தனது மகள் அம்ரீன்பானுவை மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே வீசி பெர்சானாபானு மலிக் கொலை செய்தார். அதன் பின்னர், தனது மகளை காணவில்லை என்று அவர் நாடகமாடியுள்ளார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனையின் பின்புறம் மூன்று மாத குழந்தை பிணமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். 

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மருத்துவமனைக்க்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெர்சானாபானு தனது மகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனையின் மூன்றாவது மாடிக்கு செல்வதும் பிறகு மாடியில் இருந்து அவர் மட்டும் தனியே வருவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. 

அந்த காட்சியின் அடிப்படையில் பெர்சானா பானுவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் தனது குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் குழந்தையை மாடியில் இருந்து கீழே வீசி கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, பெர்சானாவை காவல்துறையினர் கைது செய்தனர்.