#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காக ஒரு பைக் சாகசம்!!.. பரிதாபமாக பலியான இளம்பெண்..!
இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காக ஒரு பைக் சாகசம்!!.. பரிதாபமாக பலியான இளம்பெண்..!
மஹாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள ஆதர்ஷ் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் தஸ்லிம் பெரோஸ் பதான் (31). புனே நகரை சேர்ந்த ஆயன் ஷேக் மற்றும் சையத் ஜாவித் ஷேக் என்ற இளைஞர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்ட போது தஸ்லிம் பெரோஸ் பதான் மீது இடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக புனே நகரில் முகம்மதுவாதி பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் என்ற இடத்தில் அமைந்துள்ள பால்கி சாலையில் ஆயன் ஷேக் மற்றும் சையத் ஜாவித் ஷேக் ஆகிய இருவரும் பைக்கில் சாகசம் செய்ததுடன் அவற்றை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இருவரில் ஆயன் ஷேக் பைக்கை ஓட்டியுள்ளார். பைக் சையத் ஜாவித் ஷேக் என்பவர் பைக்கின் பின்னால் அமர்ந்து வீடியோ எடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுவதற்காக, சாகச காட்சிகளை படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதே சாலையில் நடந்து சென்ற இளம்பெண் தஸ்லிம் பெரோஸ் பதான் மீது ஆயன் ஷேக் மற்றும் ஜாவித் ஷேக் வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பைக் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட தஸ்லிம் பெரோஸ் பதான், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திய வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வான்வதி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயவந்த் ஜாதவ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டதுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தப்பியோடிய வாலிபர்கள் அடையாளம் தெரியவந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் ஆயின் ஷேக், ஜாவித் ஷேக் ஆகிய இருவரின் மீதும், வாகனத்தை அதிவேகமாக ஓட்டியது, விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.