ஐ.ஐ.டி விடுதியின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை... மும்பையில் பரபரப்பு...!

ஐ.ஐ.டி விடுதியின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை... மும்பையில் பரபரப்பு...!



A student committed suicide by jumping from the seventh floor of the IIT hostel... There was a stir in Mumbai...

மும்பை ஐ.ஐ.டியில் படித்த முதலாமாண்டு மாணவர், விடுதியின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் பொவாய் பகுதியில் இருக்கும் ஐஐடியில் மூன்று மாதங்களுக்கு முன்பு குஜராத்தின் ஆகமதாபாத் நகரைச் சேர்ந்த தர்ஷன் சொலாங்கி என்ற மாணவர் சேர்ந்துள்ளார்.

பி.டெக் இயந்திரவியல் பிரிவில், முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள தர்ஷன், ஐஐடியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் விடுதியின் ஏழாவது மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விடுதியின் பாதுகாவலர்கள் இதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து ஐஐடி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவர் தங்கி இருந்த விடுதி அறையில் தற்கொலைக்கான குறிப்பு எதுவும் காணப்படவில்லை. இதனால் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

எனவே தற்செயலான மரணம் என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தர்ஷன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.