நான் பேக் பெஞ்சர் சார்.. எக்ஸாம் எழுத வந்திருக்கேன்.. விசிட் அடித்த பாம்பால், நடுங்கிப்போன ஆசிரியர்கள்.!



a Snake on Guru Nanak English High School Mumbai Later Rescued

பள்ளியை தேர்வு மையமாக தயார் செய்யும் பணி நடைபெறும்போது, வகுப்பறைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காட்கோபர், ரமாபாய் நகரில் குருநானக் ஆங்கில மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சம்பவத்தன்று பொதுத்தேர்வுக்காக பள்ளியை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. 

அப்போது, பள்ளியில் உள்ள வகுப்பறை ஒன்றில் 2.5 அடி நீளமுள்ள விஷத்தன்மையற்ற பாம்பு இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் பாம்பை பிடிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளனர். 

snake

சம்பவ இடத்திற்கு விரைந்த தொண்டு நிறுவனத்தார், வகுப்பறையில் இருந்த பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். வகுப்பறையில் உள்ள கடைசி பெஞ்சுக்கு அடியில் பாம்பு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Both Images are Representative