தொடர்ந்து அழுது கொண்டே இருந்த நான்கு மாத கைக்குழந்தை... கொடூரமாக கொலை செய்த தாய்... பரபரப்பு சம்பவம்!!

தொடர்ந்து அழுது கொண்டே இருந்த நான்கு மாத கைக்குழந்தை... கொடூரமாக கொலை செய்த தாய்... பரபரப்பு சம்பவம்!!


30 year old mother murder her children in Maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் துர்பதாபாய் கன்பத் நிமல்வாட்(30). இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு மகனும், பிறந்து நான்கு மாதங்களே ஆன ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று நான்கு மாத கைக்குழந்தை இடைவிடாமல் அழுது கொண்டே இருந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த குழந்தையின் தாய் துளியும் இரக்கமின்றி குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இரண்டு வயது மகனும் உணவு கேட்டு தாயை தொந்தரவு செய்ததால் மகனையும் கொலை செய்துள்ளார்.

maharashtra

இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் சிறைக்கு சென்று விடுவோம் என்ற பயத்தில் அந்தப் பெண் ,அவரின் தாய் மற்றும் சகோதரன் உதவியை நாட , குழந்தைகளை அவர்கள் எரித்து கொலை செய்துள்ளனர்.  போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின் இந்த வழக்கில் குழந்தைகளின் தாய்  உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.