சரக்கடித்து செக்ஸ் ஆசையா உங்களுக்கு?.. உல்லாச ஹார்மோன் கைலாசம் அனுப்பும் பகீர் தகவல் அம்பலம்.!

சரக்கடித்து செக்ஸ் ஆசையா உங்களுக்கு?.. உல்லாச ஹார்மோன் கைலாசம் அனுப்பும் பகீர் தகவல் அம்பலம்.!



Couple Died DUring Sex Issue Reason 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதி, திருமணம் முடிந்த அன்றைய இரவில் தங்களின் முதலிரவு அறைக்குள் சென்று உல்லாசமாக இருந்துள்ளது. அப்போது, இருவருக்கும் ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. 

மறுநாள் காலையில் பெற்றோர்கள் தம்பதிகள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் விபரம் புரிந்துள்ளது. இருவரின் உடலும் மருத்துவ பரிசோதனைக்கு அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டது. 

அப்போதுதான் தம்பதிகள் தாம்பத்தியத்தின் போதே ஒரே நேரத்தில் உயிரைவிட்டது உறுதியானது. இதுகுறித்து கலவிக்கான மருத்துவர்கள் தெரிவிக்கையில், "இவ்வாறான மரணம் என்பது மிகவும் அரிதானது. உலகளவில் 0.2% நபர்கள் தாம்பத்தியத்தின் போது உயிரிழக்கிறார்கள். 

பொதுவாக தாம்பத்தியத்தின் போது ஏற்படும் மரணத்திற்கு செக்ஸ் உணர்வை தூண்டும் ஹர்மோனே காரணம். ஏனெனில் செக்ஸ் உணர்வை தூண்டும் ஹார்மோன் இயற்கையாக நீடிக்கும் பட்சத்தில் பிரச்சனை இல்லை. அதனை மாத்திரை அல்லது மதுபானம் உட்பட போதைப்பொருள் எடுத்துக்கொண்டு பின் தூண்டுவது மிகப்பெரிய பிரச்சனை. 

இதுவே தம்பதிகளுக்கு அவர்களின் உச்சக்கட்டத்தின் போது அல்லது உச்சக்கட்டம் நிகழ்ந்த சில நிமிடங்களில் மரணத்தை தருகிறது. மாரடைப்பு மூலமாக இவ்விவகாரத்தில் மரணம் நிகழ்கிறது. இவ்வாறான மரணம் அரிதானது என்றாலும், தம்பதிகள் அலட்சியமாக மாத்திரைகள், போதை பொருளை உட்கொண்டு உல்லாசமாக இருப்பதே மரணத்திற்கு காரணமாக அமைகிறது" என தெரிவித்தார்.