திடீரென செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி! ஏன்? என்ன கூறியுள்ளார்??

திடீரென செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி! ஏன்? என்ன கூறியுள்ளார்??



Vivek wife arrange press meet

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். அவரது மரணம் திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மேலும் நடிகர் விவேக்கிற்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என அனைவரும் வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்தனர். பின்னர் நடிகராக மட்டுமின்றி சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவந்த நடிகர் விவேக்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

vivek

இந்நிலையில் இன்று விவேக்கின் மனைவி அருள்செல்வி, அவருடைய மகள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்பொழுது பேசிய விவேக்கின் மனைவி, நான் என் கணவரை இழந்து நிற்கும் இந்த நேரத்தில், என் குடும்பத்துக்கு பக்கபலமாக, துணையாக நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு மனமார்ந்த நன்றி. என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அது என் கணவருக்கு கிடைத்த கௌரவம். அதனை நாங்கள் என்றும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம். 

மேலும் கடைசிவரை எங்களுடன் நின்ற காவல்துறை, ஊடகத்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டுமின்றி என் கணவருடன் கடைசி வரை வந்த கோடான கோடி ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.