குழந்தைகளின் படிப்பு செலவிற்காக பணம் கேட்ட மீசை ராஜேந்திரன்.. பணமும் கிடையாது, பட வாய்ப்பு கிடையாது ஒழுங்கா ஓடிவிடு என்று மிரட்டிய வடிவேலு.?



Vadivelu threatened co acters for ask childrens education

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்சம் தொட்ட வடிவேலு பல சர்ச்சைகளினால் சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார். இதன் பின் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி  கொடுத்துள்ளார் வடிவேல்.

Vadivelu

நகைச்சுவை கதாபாத்திரத்தில் இருந்து கதாநாயகனாக நடித்திருக்கும் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ், எலி திரைப்படங்களின் நடித்திருந்தார். இப்படங்கள் மிகப்பெரும் தோல்வியை தழுவின.

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'மாமன்னன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறார். , சமீப காலமாகவே வடிவேலுவை சுற்றி பல சர்ச்சையான செய்திகள் வெளியாகி வருகின்றன.

Vadivelu

இதுபோன்ற நிலையில், தற்போது நடிகர் மீசை ராஜேந்திரனும் வடிவேலுவை குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, "சக நடிகர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக வடிவேலுவிடம் உதவி கேட்டால் இப்போ ஐநூறு கேட்ப நாளைக்கு அஞ்சு லட்ச ரூபா கேட்ப ஒழுங்கா ஓடிவிடு, பட வாய்ப்பும் இனி உனக்கு கிடையாது என்று திமிராக பேசுவாராம். இவ்வாறாக மீசை ராஜேந்திரன் வடிவேலுவை பற்றி கூறிருக்கிறார்.