200 கோடி பட்ஜெட்டில் "வாடிவாசல்"..! ஜல்லிக்கட்டு நடக்கும் சமயத்தில் வீரத்தமிழர்களை உற்சாகப்படுத்த வருகிறார் சூர்யா.! நியூ அப்டேட்
200 கோடி பட்ஜெட்டில் "வாடிவாசல்"..! ஜல்லிக்கட்டு நடக்கும் சமயத்தில் வீரத்தமிழர்களை உற்சாகப்படுத்த வருகிறார் சூர்யா.! நியூ அப்டேட்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஜூலையில் ’வாடிவாசல்’ படப்பிடிப்பை ஆரம்பித்து வரும் ஜனவரி பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடக்கும் சமயத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்திற்குப் பட்ஜெட் 200 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் அமீர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.