லியோ கொடுத்த ஹிட்., திரிஷா எடுத்த முடிவால், திணரும் தயாரிப்பாளர்கள்.!



Trisha got a raise from Leo

தமிழ் திரையுலகில் சென்ற 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திரிஷா. இவருடன் திரையுலக பயணத்தை தொடங்கிய நபர்கள் சப்போர்ட் ரோல்களில் நடித்து வருகிறார்கள். ஆனால், இவர் மட்டும் இன்னமும் பிசியான கதாநாயகியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

vijay

தமிழ் திரையுலகில் இவருக்கான மிகச்சிறந்த கதாபாத்திர ஜோடியாக கருதப்படும் தளபதி விஜய்யுடன் ஆதி, குருவி, திருப்பாச்சி, கில்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இரண்டு பேருக்குமிடையிலான ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி 15 வருடங்களில் எந்த வித மாற்றத்தையும் சந்திக்கவில்லை. இதனால் ரசிகர்கள் சற்றே பிரமித்து தான் போனார்கள்.

தன்னுடைய திரைத்துறை வாழ்க்கையின் ஆரம்பத்தில் லட்சங்களில் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருந்த திரிஷா, அடுத்தடுத்து கிடைத்த வெற்றி வாய்ப்புகளால், சம்பளத்தை கோடிகளுக்கு அதிகரித்தார். ஆனால் இதற்கிடையில் சினிமா பயணத்தில் ஒரு சிறு இடைவேளை உண்டானாலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து மறுபடியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்த திரிஷா, விஜயுடன் லியோ திரைப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து அசத்தியிருந்தார்.

vijay

லியோ திரைப்படத்தில் திரிஷாவுக்கு 4 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான், விடாமுயற்சி, தக்லைஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்ற  திரிஷா தன்னுடைய சம்பளத்தை 10 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.