"வெறித்தனம், வெறித்தனம்" கேரள விமான நிலையத்தில் விஜய்க்காக ரசிகர்கள் செய்த செயல்.!?
தளபதி விஜய் சொன்ன ஒத்த வார்த்தை!தளபதி 65 படக்குழு எடுத்த அதிரடி முடிவு ! என்ன தெரியுமா??
தளபதி விஜய் சொன்ன ஒத்த வார்த்தை!தளபதி 65 படக்குழு எடுத்த அதிரடி முடிவு ! என்ன தெரியுமா??
தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனான வலம் வரும் தளபதி விஜய் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
மேலும் இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அவர்களுடன் யோகிபாபு, அபர்ணா தாஸ்,விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்டமான மால் போன்ற செட் போடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமெடுத்து வரும் நிலையில் தளபதி விஜய், செட் போடும் பணியாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அந்த பணியை உடனடியாக நிறுத்த கூறியுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு அந்த பணிகளை தொடங்கலாம் என அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் விஜய் சொன்னதை கேட்டு படக்குழுவும் செட் போடும் பணியை உடனடியாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.