தலைவா நீங்க காமெடியன் இல்லை.! உங்கள் மறைவிற்கு கோடிக்கணக்கான மரங்களும் அழுகின்றது.! சூரி உருக்கம்.!
தலைவா நீங்க காமெடியன் இல்லை.! உங்கள் மறைவிற்கு கோடிக்கணக்கான மரங்களும் அழுகின்றது.! சூரி உருக்கம்.!
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணியளவில் காலமானார். நடிகர் விவேக்கின் மறைவிற்கு நடிகர், நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக், அவரது சிறந்த நடிப்பால் பத்ம ஸ்ரீ, பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஈடுபட்ட விவேக், அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார்.
உங்களால் சிரித்த, சிந்தித்த கோடிக்கணக்கான மனங்கள் மட்டும் அல்ல... நீங்கள் உருவாக்கிய விழிப்புணர்வால் நடப்பட்ட கோடிக்கணக்கான மரங்களும் உங்களுக்காகக் கண்ணீர் விடுகின்றன... சென்று வாருங்கள் @Actor_Vivek சார்🙏 pic.twitter.com/cbV8dg6Efu
— Actor Soori (@sooriofficial) April 17, 2021
நடிகர் விவேக் மறைவு குறித்து காமெடி நடிகர் சூரி கூறுகையில், சமூக சீர்திருத்த விழிப்புணர்வை நகைச்சுவையாக மக்களுக்கு கொண்டு சேர்த்தவர் நடிகர் விவேக். அவர் காமெடியன் அல்ல, அவர்தான் உண்மையான ஹீரோ. கோடிக்கணக்கான மக்கள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான மரங்களும் அவரது மறைவை நினைத்து அழுகின்றன என உருக்கமாக தெரிவித்துள்ளார் நடிகர் சூரி.