ரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்! பதறிப்போன ரசிகர்கள்!
ரத்த காயத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்த சிம்ரன்! பதறிப்போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் 1990–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், ரமணா போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
நடிகை சிம்ரனுக்கு திருமணம் ஆன பிறகு சற்று சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீப காலமாக சிம்ரன் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வில்லியாக நடித்தார். இதனையடுத்து பேட்ட படத்தில் முதல் முறையாக ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்தார்.
Behind the scene from my upcoming movie!!#behindthescenes #bts #tuesdayvibes #shootmodeon #shootmode #workmodeon #shoot pic.twitter.com/SzOQ1E5DCL
— Simran (@SimranbaggaOffc) February 18, 2020
இந்தநிலையில் நடிகை சிம்ரன், தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனக்கூறி கால், மற்றும் நெத்தியில் ரத்த காயத்துடன் இருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களை பதறவைத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. உண்மையிலே சிம்ரனுக்கு காயமோ என்று. பிறகு உன்னிப்பாக கவனித்தபோது தான் இது படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என சிம்ரன் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.