என்னது.. பணத்திற்காகவா.! நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்.! ஓப்பனாக உடைத்த நடிகை வரலட்சுமி!!
பாக்யராஜின் மகன் சாந்தனு மற்றும் அவரது மனைவி இருவரும் பிரிந்து விட்டனரா.? இணையத்தில் தீயாய் பரவிய செய்தி..
பாக்யராஜின் மகன் சாந்தனு மற்றும் அவரது மனைவி இருவரும் பிரிந்து விட்டனரா.? இணையத்தில் தீயாய் பரவிய செய்தி..
பிரபல நடிகரான பாக்யராஜின் மகன் சாந்தனு சமீபத்தில் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின்பு தற்போது 'ராவணக்கோட்டம்" திரைப்படத்தில் கதாநாயகனாக இருக்கிறார். இப்படம் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற நிலையில், சாந்தனு மற்றும் அவருடைய மனைவி இருவரும் யு ட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார்கள். அந்த சேனல் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு சுவாரசியமாக பதில் அளித்து கொண்டிருந்த சாந்தனுமிடம் உங்களுக்குள் பிரேக்கப் நடந்திருக்கிறதா என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த சாந்தனு, நானும் கிகியும் லவ் பண்ணும் காலத்தில் சண்டை போட்டு சில நாட்கள் பேசாமல் இருந்தோம். அந்த சமயத்தில் நான் ஒரு பொண்ணுடன் காபி குடிப்பதற்காக ஹோட்டலுக்கு சென்று இருந்தேன்.
அதைப் பார்த்த கிகியின் ஃப்ரெண்ட் ஒருத்தங்க கிகியிக்கு கால் பண்ணி சொல்லி கொடுத்துட்டாங்க. இதுக்கு அப்புறம் நிரந்தரமா பிரேக் அப் ஆகிடுச்சி. இதன்பின் எட்டு வருஷம் ஆச்சு நாங்க பேசுறதுக்கு என்று அந்த பேட்டியில் சாந்தனு கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.