திடீரென்று பாடல் நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா.. என்ன நடந்தது.?

திடீரென்று பாடல் நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா.. என்ன நடந்தது.?



Samantha cried at singing program

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

samantha

மேலும் தனக்கு ஏற்பட்டிருக்கும் மயோசைட்டிஸ் எனும் நோய் பாதிப்பினால் திரைக்கதையிலிருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார் சமந்தா. இதனை அடுத்து விளம்பர படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.  இந்நிலையில் தெலுங்கில் ஒளிபரப்பப்பட்ட பாடல் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக கலந்து கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

samantha

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஹிப்ஹாப் பாடகர் ஒருவர் ஜலாலுதீன் எனும் பாடலை பாடியிருந்தார். இப்பாடல் கேட்ட சமந்தா கண் கலங்கி அவரை கட்டி அணைத்தார். சமந்தா நோய் பாதிப்பிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட போது இந்த பாடல் தான் அவரை உற்சாகப்படுத்தியது என்று கூறியிருந்தார். சமந்தா கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மனமுடைய செய்தது.