நடிகைக்கு ஒரு இரவுக்கு ஒருகோடி விவகாரம்! அந்தர்பல்டி அடித்த நடிகை!

நடிகைக்கு ஒரு இரவுக்கு ஒருகோடி விவகாரம்! அந்தர்பல்டி அடித்த நடிகை!



sakshi chaudhary one crore for one night issue

பிரபல நடிகை சாக்ஷி சவுத்ரி சில நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பு டிவிட்டர் ஒன்றை பதிவிட்டிருந்தார். சிலர் தன்னை தவறான முறையில் அணுகுவதாகவும், தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டாள் ஒரு இரவுக்கு ஒரு கோடி தருவதாகவும் தன்னை அவமதிப்பதாக அதில் தெரிவித்திருந்தார்.

மேலும், நானும் ஒரு மனுஷிதான், நான் விற்பனைக்கு அல்ல என காட்டமாக அந்த டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் சாக்ஷி சவுத்ரி. இந்த ட்விட் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் சாக்ஷி சவுத்ரி ஆதரவாகவும், பலர் சாக்ஷி சவுத்ரி கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

Sakshi Chaudhary

எப்போது ஆபாசமான பதிவுகளை பதிவிட்டால் இப்படித்தான் ரசிகர்கள் கேட்பார்கள் என கூறிவந்த நிலையில் இன்று நான் அவ்வாறு கூறவே இல்லை என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் சாக்ஷி சவுத்ரி.

சாக்ஷி சவுத்ரி அளித்துள்ள புதிய பேட்டியில் தான் அப்படி பதிவிடவே இல்லை என தெரிவித்துள்ளார். "என் ட்விட்டர் கணக்கை வேறொருவர் கவனிக்கிறார். அவருக்கு அப்படி மெசேஜ் வந்திருக்கும், அதனால் அவர் அப்படி பதிவிட்டிருக்கலாம்" என விளக்கம் கொடுத்துள்ளார்.