சிங்கபெண்ணே..! அக்காவின் வெறித்தனத்தால் மிரண்டுபோன ரம்யாவின் தம்பி! இன்ப அதிர்ச்சியில் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

சிங்கபெண்ணே..! அக்காவின் வெறித்தனத்தால் மிரண்டுபோன ரம்யாவின் தம்பி! இன்ப அதிர்ச்சியில் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!


ramya brother appriciate his sister

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4, 95 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆரி, சோம், பாலா, ரியோ, கேபிரில்லா, ரம்யா,ஷிவானி ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுள்ளது. அதில் பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று பிக்பாஸ் கடுமையான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அதனை தாக்குபிடிக்க முடியாமல் அனைத்து போட்டியாளர்களும் வெளியேறிய நிலையில் ரம்யா மற்றும் ஷிவானி மட்டும் 5 மணி நேரம் அந்த டாஸ்கை செய்துள்ளனர். மேலும் அப்பொழுது அவர்களை பிக்பாஸ், சிங்க பெண்ணே பாடல் பின்னணியில் ஒலிக்கவிட்டு ஊக்குவித்தார்.

இதனைக் கண்ட ரம்யாவின் தம்பி பரசு தனது இன்ஸ்டாகிராமில் அத்தகைய புகைப்படத்தை வெளியிட்டு, இது போதும் நீ ஜெயிச்சுட்ட மாறா எனவும், ஷிவானியையும் நீங்களும் வேற லெவல் எனவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.