நடிகை நிலானிக்கு பல பக்கங்கள் இருந்து வரும் நெருக்கடி!. செய்வதறியாது தவிக்கும் நிலானி!.
நடிகை நிலானிக்கு பல பக்கங்கள் இருந்து வரும் நெருக்கடி!. செய்வதறியாது தவிக்கும் நிலானி!.
சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக, பொலிசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சின்னத்திரை நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததாக கூறி திரைப்பட உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தற்கொலை செய்து மரணமடைந்தார். இதனையடுத்து அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த படுக்கையறை புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.
மேலும் காந்தி லலித்குமாரின் மறைவிற்கு நிலானி தான் கரணம் என லலித்குமாரின் சகோதரர் கூறிவந்த நிலையில், நிலானிக்கு பல நபருடன் தொடர்பு உள்ளதாகவும் கூறினார். இதனால் ஊடகங்களின் முன் பேசிய நிலானி கண்ணீருடன் லலித்குமார் குறித்த தகவல்களை தெரிவித்தார்.
அதன் பின்னர், தன் மீது அவதூறு பரவுவதால் மனமுடைந்த நிலானி வீட்டிலில் இருந்த கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மதுரவாயல் பொலிசார் தற்கொலைக்கு முயன்றதாக நிலானி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் நடிகை நிலானிக்கு மேலும் வேதனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.