திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!
ஹோட்டல் அறையில் பிரபல சீரியல்நடிகை எடுத்த விபரீத முடிவு, அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

பெங்காலி சினிமாவை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்காலி சினிமாவை சேர்ந்தவர் பாயல் சக்ரபூர்த்தி என்ற நடிகை. இவர் பல சின்னதிரை சீரியல்களில் நடித்து வந்தார். மேலும் பாயல் தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது மகனுடன் தனியே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் ஹோட்டலில் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார் .நேற்று வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவை தட்டியுள்ளனர்.ஆனால் அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.கதவையும் திறக்கவில்லை உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விவரம் தெரிந்து வந்த போலீசார் அறை கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்பொழுது நடிகை தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
பின்னர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு காரணம் என்ன என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.