பிரபல கிராமிய பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்.!

பிரபல கிராமிய பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்.!



Paravai muniyamma died at early morning 2.30am

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.

இவர் ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். 

paravai muniyamma

மேலும் இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

சமீப காலமாக சிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார்.