வீடியோ: இளகிய மனத்தவர்கள் பார்க்க வேண்டாம்.. 5 வயது மகளை மாடியில் இருந்து வீசி கொன்ற தாய்.. வைரல் வீடியோ..
வீடியோ: இளகிய மனத்தவர்கள் பார்க்க வேண்டாம்.. 5 வயது மகளை மாடியில் இருந்து வீசி கொன்ற தாய்.. வைரல் வீடியோ..
பெத்த மகளை மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த தாய்யை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் உள்ள சம்பங்கி ராமநகர் பகுதியை சேர்ந்தவர் சோமேஸ்வர். இவருக்கு 5 வயதில் வாய் பேச முடியாத, காது கேட்க்காத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இவரது மனைவியும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது அடுக்கு மாடி குடியிருப்பின் 4ஆவது மாடியில் இருந்து தனது மகளை கீழே தூக்கி வீசி கொலை செய்துள்ளார் சோமேஸ்வரின் மனைவி. மகளை கீழே தூக்கி வீசிவிட்டு தானும் கீழே குதிக்க இருந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதேநேரம், கீழே விழுந்த 5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சோமேஸ்வர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சோமேஸ்வரின் மனைவியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.