ஓணம் புடவையில், கட்டியணைத்து முத்தமிட்டபடி நடிகை கீர்த்தி சுரேஷ்! தீயாய் பரவும் புகைப்படம்!!

ஓணம் புடவையில், கட்டியணைத்து முத்தமிட்டபடி நடிகை கீர்த்தி சுரேஷ்! தீயாய் பரவும் புகைப்படம்!!


Keerthi suresh onam special photos

நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது.

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது.

keerthi Suresh

இந்த ஆண்டு ஓணம் பண்டிகை இறுதி நாட்களை எட்டியுள்ளநிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளது. பொதுமக்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை தங்கள் வீடுகளில் கோலமிட்டு, புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்வதோடு தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுவருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஓணம் புத்தாடையில், தனது செல்ல நாய் குட்டியை கட்டி அணைத்தவாறு, முத்தமிடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தனது ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.