காயங்களை பாடங்களா ஏற்கிறேன்... ரவி மோகன் -ஆர்த்தி சர்ச்சைக்கு நடுவில் வைரலாகும் கெனிஷாவின் பதிவு!



jayam-ravi-arthi-kenisha-controversy

ஜெயம் ரவி என்றுபேறுடைய நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில் பங்கேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதன் பின்னணியில் தொடர்ச்சியாக நிகழ்ந்த சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்த்தியின் அறிக்கையின் தாக்கம்

இந்த விவகாரத்திற்கு பிறகு ஆர்த்தி ரவி தனது அறிக்கையை வெளியிட்டார். அதில், ரவி மோகன் மீது தன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டது.

ஜெயம் ரவி

ரவி மோகனின் பதிலடி

ஆர்த்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ரவி மோகன் தனது விளக்கத்தை வெளியிட்டார். அவர் சொன்ன கருத்துகள் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 42 கிலோ உடல் எடையை குறைத்த ரகசியத்தை ரசிகர்களுக்கு சொன்ன அஜித்! இப்படித்தான் என்று அவரே கூறியுள்ளார் பாருங்க...

ஆர்த்தியின் தாயாரின் வாக்குமூலம்

பின்னர் ஆர்த்தியின் அம்மா வெளியிட்ட அறிக்கை இணையத்தில் வைரலானது. அதில், ஜெயம் ரவிக்காக தான் 100 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், தங்கள் மகள் அவருடன் மீண்டும் சேர வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும் கூறியிருந்தார்.

பாடகி கெனிஷாவின் உணர்வுப்பூர்வமான பதிவு

இந்த சூழ்நிலைக்குப் பதிலாக கெனிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆங்கிலத்தில் உணர்வுப்பூர்வமான கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில்,

“சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. என் ஆன்மாவின் கஷ்டம் தனியாக நிற்கிறது. ஆனால், அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கிறது. இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். ஆழ்ந்த சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளை விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது”

என எழுதப்பட்டிருந்தது. இந்த பதிவு, ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவகாரத்தின் சூடான கட்டத்தில் வெளியானதால், ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சித்திரவதை செய்த மாமியார்! மகளை வாழாவெட்டி ஆக்குனா அம்மா! இணையத்தில் ரவிமோகன் மாமியார் வெளிவிட்ட அறிக்கை இதோ....