படத்தில் நடிப்பதற்கு முன்பு முத்தம் கேட்ட இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்!
படத்தில் நடிப்பதற்கு முன்பு முத்தம் கேட்ட இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்!
நடிகை ஜரீன் கான் 2010-ம் ஆண்டு வெளியான சல்மான் கானின் "வீர்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நகுல் நடிப்பில் வெளியான, நான் ராஜாவாகப் போகிறேன் படத்திலும் நடித்திருக்கிறார் ஜரீன் கான்.
இந்நிலையில் அவர் பாலிவுட்டில் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், ஒரு படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டியிருந்ததாக கூறிய ஜரீன் கான், அதற்காக அந்த படத்தின் இயக்குனர், தன்னுடன் முத்தக்காட்சியை ஒத்திகை பார்க்க வேண்டும் என அழைத்ததாகவும் கூறியுள்ளார்.
அந்த இயக்குனர் உங்களிடம் இருக்கும் தயக்கத்தை போக்கவே இந்த ஒத்திகை என்றார். அவர் கூறியதற்கு நான் முத்தக் காட்சிக்கு ஒத்திகை செய்ய முடியவே முடியாது என கூறி மறுத்துவிட்டேன். இந்நிலையில் மற்றொரு நபரோ நீங்கள் என்னுடன் நட்பையும் தாண்டி பழகினால் உங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு நான் பொறுப்பு என்றார்.
எனக்கு சுய மரியாதை தான் முக்கியம் என்பதால் அந்த நபரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டேன் என ஜரீன்கான் தனது பேட்டியில் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி இந்தி சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.