எம்-மகன் படத்தில் இந்த காமெடி காட்சி பார்த்திருக்கீங்களா?.. உண்மையை பகிர்ந்த நடிகை சரண்யா பொன்வண்ணன்.! நடந்தது என்ன?.!

தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, இன்று அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு, எம்10 மகன் திரைப்படத்தில் உள்ள காமெடி காட்சி குறித்து பேட்டி அளித்து இருந்தார்.
கடந்த 2006ம் ஆண்டு பரத், நாசர், கோபிகா, வடிவேலு, சரண்யா பொன்வண்ணன் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் எம் மகன் என்ற எம்10 மகன். இந்த திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் ரசித்து பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.
இப்படத்தில் உள்ள வடிவேலுவின் நகைச்சுவை மற்றும் தந்தை-மகன்-குடும்பத்திற்கு இடையேயான பாசப்பிணைப்பு இன்று வரை பலராலும் பாராட்டப்படுகிறது. படத்தை இயக்குனர் திருமுருகன் இயக்கி இருந்தார்.
படத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கோவில் வாசலில் உருண்டு அங்கபிரதஷ்ணம் செய்வது போன்ற காமெடி காட்சிகள் இருக்கும். அந்த காட்சியின் போது நடிகை சரண்யா தன்னால் நடிக்க இயலாது என்று திருமுருகனிடம் கூறியுள்ளார்.
ஆனால், திருமுருகன், வடிவேலு, பரத் ஆகியோரின் முயற்சியில் இந்த காட்சிகள் படமபட்டுள்ளது. தரையில் உருள்வது, மண்ணில் பிறழ்வது போன்ற காட்சிகளில் நடிக்க விருப்பமில்லாத சரண்யா, பல நிர்பந்தத்திற்கு பின்னர் அக்காட்சியில் நடிக்க மனமின்றி ஒப்புக்கொண்டார்.
அந்த காட்சி திரைப்பட வெளியீடுக்கு பின்னர் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது, அதன் வாயிலாக தமிழ்நாடு மாநில அரசின் உயரிய விருதும் கிடைத்தது. இந்த நினைவுகளை பகிர்ந்துகொண்ட நடிகை சரண்யா, விருப்பமின்றி நான் நடித்த காட்சிதான் எனது திரை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி அழைத்து சென்றது என தெரிவித்தார்.