ஆள்மாறாட்டம் செய்யாதீங்க.. செம ஆவேசத்துடன் நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு! ஏன், எதனால் தெரியுமா??

ஆள்மாறாட்டம் செய்யாதீங்க.. செம ஆவேசத்துடன் நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு! ஏன், எதனால் தெரியுமா??



dulkar salman tweet about fake id in social media

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு  வெளிவந்த செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த சார்லி, உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.

மேலும் நடிகர் துல்கர் சல்மான் தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த வாயை மூடி பேசவும் படத்தில் நடிகை நஸ்ரியாவுடன் இணைந்து நடித்திருந்தார். பின்னர் அவர் ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் இளம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படமும் செம ஹிட்டானது.

இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் தனது பெயரில் ஏராளமான கணக்குகள் இருப்பதை அறிந்த துல்கர் சல்மான் ஆவேசமாக தனது ட்விட்டர் பக்கத்தில், நான் அதிக கணக்குகளில் இல்லை. இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவுசெய்து சமூக வலைத்தளத்தில் என்னை போல யாரும் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.