"அற்ப உயிரினம் என்று இளையராஜாவை தாக்கி பேசினேனா"?.... ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்.!!



did-i-attack-ilayaraja-as-a-small-creature-james-vasant

தமிழ் சினிமாவில் இசை சக்கரவர்த்தி என்றால் அது இசைஞானி இளையராஜா தான். பல்வேறு வருடங்களாக தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக இசை உலகில் விளங்கி வருபவர் அவர். 70, 80களில் அவர் இசையை வைத்து பாடல்களை கூட இன்றைய இளைஞர்கள்  கேட்டு ரசிக்கின்றனர் என்பதில் இருந்தே அவனது புகழை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு பெரிய இசை மேதையாக இருந்தாலும் அவர் சில நேரங்களில்  தனது அகங்காரமான பேச்சால் சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாக இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு தலைக்கனம் இருக்கும் என்றும் தன்னிடம் அதனை கேட்பவர்களுக்கும் தலைக்கனம் இருக்கும் என்றும் சர்ச்சை கருத்தை பதிவிட்டு இருந்தார்.

Illayaraja

இதற்கு பதில் அளிப்பது போல இசையமைப்பாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளத்தில் புகழ் அனைவருக்கும் பிடிக்கும் தான் ஆனால் இது புகழை மட்டுமே பிடித்து வாழும் அற்பு உயிரினம் என்று பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவு இளையராஜாவை தான் மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக பலரும் ஜேம்ஸ் வசந்தை விமர்சித்து வந்தனர்.

Illayaraja

இந்நிலையில் அதற்கு பதிலளித்திருக்கும் ஜேம்ஸ் வசந்தன், கலைக்கு இளையராஜா தான் இசை குரு என்றும் நான் அவரின் புது வழி கருத்தை தான் விமர்சித்தேன் தவிர அவரை ஒருபோதும் கீழ்தரமாக விமர்சனம் செய்ததில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இளையராஜாவின் மீது  மதப்பாவுபாட்டுடன் கூடிய எந்த ஒரு காழ் புணர்ச்சியும் தனக்கு இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.