"மனைவி வேண்டாம் ஜாலியாக இருக்க அவங்கதான் வேணும்" தொடரும் வடிவேலுவின் சர்ச்சை..

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் வடிவேலு. நகைச்சுவை மன்னர்கள் வரிசையில் நாகேஷ், கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்ததாக வடிவேலு இடம்பெற்றிருந்தார்.
தனது நகைச்சுவை திறமையின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்த வடிவேலு, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார். இவரின் நகைச்சுவை காட்சிகள் அனைத்துமே தற்போது மீம்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
காமெடி நடிகரிலிருந்து கதாநாயகனாக 23ஆம் புலிகேசி, தெனாலி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற ஹிட் படங்களையும் எலி, நாய் சேகர் போன்ற தோல்வி படங்களையும் தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார்.
இது போன்ற நிலையில், வடிவேலு வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் நண்பர்களுடன் தான் செல்வாறாம். நண்பர்களுடன் குடித்துவிட்டு ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் செல்வதை தவிர்த்து வருகிறார் என்று பிரபல சினிமா நட்சத்திரம் ஒருவர் கூறியிருக்கிறார்.