கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
சச்சினையும் சீண்டும் சினிமா நடிகை........?

தமிழ்,தெலுங்கு என மாறி மாறி இரு திரைஉலகினரையும் கலங்கடிப்பவர் நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு கட்டத்தில் தமிழ் பக்கம் திரும்பிய அவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் , டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் மீது அபத்தமாக பாலியல் குற்றம் சுமத்தி தமிழ் திரையுலகினரை அதிற்சிக்குள்ளாக்கினார்.
இந்நிலையில்,தற்பொழுது சினிமா துறையிலிருந்து விலகி விளையாட்டு துறைக்கு சென்றுள்ளார்.இதன் விளைவாக கிரிக்கெட்' உலகின் கடவுள் 'என்று வர்ணிக்கப்படும் பிளாஸ்டர் மாஸ்டர்.சச்சின் டெண்டுல்கர் மீதும் பாலியல் குற்றம் சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இதனால் சச்சின் ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்குண்டாகியுள்ளார்.
இதற்கு முன்பு , தன்னுடைய இன்னல்களை ‘ரெட்டி டைரி’ என்று திரைபடமாக எடுக்கப்போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில், ரொமேண்டிக் நபரான சச்சின், ஹைதராபாத் வந்தபோது ஒரு பெண்ணுடன் ரொமான்ஸ் செய்தார் எனவும் அதற்கு உயர் அதிகாரி ஒருவரான சாமுண்டீஸ்வரி சுவாமி உதவினார் எனவும் பதிவிட்டுள்ளார். சிறப்பாக விளையாடும் வீரர் ரொமான்ஸிலும் நன்றாக விளையாடுவாரா? என்றும் சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்துள்ளார்.
சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக கிரிக்கெட் பிரபலங்கள் மீது விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுவதுண்டு , ஆனால், இதுவரை எந்த சர்ச்சைகளிழும் சிக்காத சச்சின் குறித்த ஸ்ரீரெட்டி பதிவு, அவரது ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.