என்ன கொடுமை! கையில் அதிக படங்கள் இருந்தும் பிக்பாஸ்க்கு வரதுடிக்கும் பிரபல நடிகை
என்ன கொடுமை! கையில் அதிக படங்கள் இருந்தும் பிக்பாஸ்க்கு வரதுடிக்கும் பிரபல நடிகை
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் 23ம் தேதி துவங்குகிறது. முதல் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்தான் மூன்றாவது சீசனிலும் தொடர்கிறார்.
மேலு தற்போது இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் தினமும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பிரபல தமிழ் நடிகை சாந்தினி தமிழரசன் பிக்பாஸ் 3ல் வருகிறார் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது
சாந்தினி தமிழரசன் என்பவர் இந்தியத் தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களடில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் பாக்யராஜின் சித்து+2 (2010) படம் மூலம் அறிமுகமானார். நான் ராஜாவாகப் போகிறேன் (2013) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தனக்கு 17 வயதாகும் போது, 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை அழகிப்போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், முதல் மூன்று இடங்களில் தேர்வாகவில்லை.அதன் பிறகு 2009 ஆம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதன் பிறகு இயக்குநர் பாக்யராஜிடம் இருந்து அழைப்பு வந்து தனது புதிய முயற்சிக்காக திரைத்துறைக்கான தோற்ற அமைப்பு சோதனையில் கலந்து கொண்டார்.
பின்னதாக அவர் பாக்யராஜிடம் தனது திறமையை நிரூபித்து சித்து +2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இத்திரைப்படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் உடன் கதாநாயகியாக நடித்தார். இத்திரைப்படம் சிறிது தாமதத்திற்குப் பின் டிசம்பர் 2010 இல் திரைக்கு வந்தது. சராசரியான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் வசூலில் மிகவும் பின்தங்கியே இருந்தது.2010 ஆம் ஆண்டின் நடுவில் அவர் படித்துறை என்ற புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அப்படம் திரைக்கு வரவில்லை.
தற்போது சாந்தினி பிக்பாஸ்-3 கலந்து கொள்ள போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது இவருக்கு கைவசம் அதிகபடங்கள் உள்ளதாம். அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு சாந்தினி பிக்பாஸ் வரவுள்ளார்.