பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பிரபல நடிகை .!!



Bigboss Eliminate Janani

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி-டிவியில்  மிகவும் பிரபலமான
நடிகர் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களை கொண்டு களமிரங்கிய பிக் பாஸ்நிகழ்ச்சி இன்று முடிவடைய உள்ளது.முதல் சீசன் போன்று பிக் பாஸ் இல்லை போலியாக உள்ளனர் என்று கலவையான விமர்சனம் பெற்றனர்.இது வரை பிக் பாஸ் நிகழ்ச்சி மீது பெரிதாக ஆர்வம் காட்டாத ரசிகர்கள் இப்பொழுது  மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்க உள்ளனர்.இந்நிலையில் 16 பேரில் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி இந்த நால்வர் மட்டுமே பைனலுக்கு வந்தனர் ஒரு வாரமாக  எந்த டாஸ்க்கும் கொடுக்காமல் சுகந்திரமாக உள்ளனர் போட்டியாளர்கள்.

இந்த  நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரவுள்ளது. இதனையடுத்து இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் ஒவ்வரு நாளும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்து போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் .இந்நிலையில் நாலு பேரில் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி இவர்களில் ஒருவர் இன்று வெளியேறுவர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.


ஜனனி இறுதி  மூன்று பேரில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில். ஜனனி மற்ற போட்டியாளருக்கு தெரியாமல்,நடனம் ஆடி கொண்டு இருக்கும்போது,கண்களை கட்டி வித்தியாசமான முறையில் வெளியேற்றப்பட்டார்.இதை நேரில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மீதம்  உள்ள மூவரில்  ஒருவரை வெற்றியாளராக தேர்ந்தெடுக்க உள்ளார்.இந்நிலையில் வெளியே வந்துள்ள ஜனனி மற்ற எலிமினேட்டான போட்டியாளர்கள் உள்ள இடத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது கண்டிப்பாக ஜனனி வெளியேறியுள்ளார் என்று தெரிகிறது.