2020ம் ஆண்டு குறித்து இளைஞர்களின் கனவுக்கன்னி அமலாபால் பதிவிட்ட பதிவு! நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்!

2020ம் ஆண்டு குறித்து இளைஞர்களின் கனவுக்கன்னி அமலாபால் பதிவிட்ட பதிவு! நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்!



amalapaul-talk-about-2020

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். இதனையடுத்து மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து அமலாபால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் ஆர்யா உள்ளிட்ட  பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அமலாபால் இந்த வருட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், 2020-ம் ஆண்டு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்து உள்ளது. புதிதாக சில முடிவுகளையும் எடுத்து இருக்கிறேன். ஆன்மிக உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. தான் என்ற அகந்தை மறைந்து விட்டது. நான் வலியிலிருந்து தப்பவில்லை. அது என்னைப் பாதிக்க அனுமதித்து, துன்பத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்.

எனக்குள் இருக்கிற குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு கொடுத்தேன். எனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கவுரவமாகவும், நன்றியோடும் ஏற்றுக்கொண்டேன். பழைய சினேகிதர்களை சந்திக்க செல்ல வேண்டும். விரோதிகளை மன்னிக்க வேண்டும். நம்மை அறிந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் 2020ம் ஆண்டில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் என்று அமலாபால்  தெரிவித்துள்ளார்.