கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
யாஷிகாவிற்கு இவருடன் திருமணமா? ரசிகர்களின் கேள்விக்கு உண்மையை போட்டுடைத்த நடிகை யாஷிகா...

துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு யார் மனதையும் கஷ்டப்படுத்தாமல் அவரும் விளையாட்டை நன்றாக விளையாடி ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
தற்போது சினிமா, சமூக வலைத்தளம் என பயங்கர பிசியாக இருந்துவரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை மற்றும் டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு இளைஞர்களை கிறங்கடித்துவருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாராக்ராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ளார்.
ரசிகர் ஒருவர் யாஷிகாவிடம், உங்களுக்கும் நிரூப்பிற்கும் எப்போது கல்யாணம் என கேட்டுள்ளார். அதற்கு அவர், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான். இப்போதைக்கு யாருடனும் திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை என பதில் கூறியுள்ளார்.