கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா மகளின் தற்போதைய நிலை என்ன தெரியுமா... ரம்பா கூறிய உருக்கமான வீடியோ பதிவு...
கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா மகளின் தற்போதைய நிலை என்ன தெரியுமா... ரம்பா கூறிய உருக்கமான வீடியோ பதிவு...
90 களிள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, போஜ்பூரி, ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற பிற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ரம்பா சினிமாவிற்கு பிறகு ஒரு சில டிவி நிகழ்ச்சிகளில் தனது பயணத்தை தொடர்ந்தார். பின்னர் இலங்கை தமிழரான தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் குழந்தைகளை பள்ளியிருந்து வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். இச்செய்தி கேட்டு ரசிகர்கள் பலரும் ரம்பா குணமடைய வேண்டும் என பிராத்தனைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது நடிகை ரம்பா தனது குழந்தைகள் அனைவரும் நலமுடன் பாதுகாப்பாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் நாங்கள் குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி என உருக்கமாக பேசியுள்ளார்.