தேர்தல் நேரத்தில் நடிகை கஸ்தூரி போட்ட ஒத்த ட்விட்! குழப்பத்தில் அரசியல் வட்டாரங்கள்!
தேர்தல் நேரத்தில் நடிகை கஸ்தூரி போட்ட ஒத்த ட்விட்! குழப்பத்தில் அரசியல் வட்டாரங்கள்!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து தற்போது முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை கஸ்தூரி.
இவர் தனது தனது சமூகவலைத்தள பக்கத்தில் சமூகத்தில் நடக்கும் பல விசயங்களுக்கு எதிராகவும்,ஆதரவாகவும் குரல் கொடுத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். மேலும் அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் சிறிதும் தயக்கமின்றி வெளிப்படையாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்தநிலையில், விவசாயிகளை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று போராடத் தூண்டியது காங்கிரஸ் மற்றும் தி.மு.க தான் என்று தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதை, நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மோடிக்கு எதிராக விவசாயிகளை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் திமுகதான் - அய்யாகண்ணு
— Kasturi Shankar (@KasthuriShankar) April 15, 2019
கர்ர்ர்ர்ர்...தூ! pic.twitter.com/Ko5yWAj8Sc
விவசாயிகளின் கோரிக்கைகளை கொண்டு சேர்க்க, தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு டெல்லி வரை விவசாயிகளை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தினார். அந்த போராட்டம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அங்கு நடந்த போராட்டத்தில், எலிக்கறி உண்பது, நிர்வாணமாய் நிற்பது என அவர்கள் நடத்திய போராட்டங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதன் பின்னர், சமீபத்தில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து தானும் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்தார் அய்யாக்கண்ணு. ஆனால், சில நாட்களுக்கு பிறகு, தேர்தலில் போட்டியிடும் தனது நிலைபாட்டை அவர் மாற்றிக்கொண்டார்.
அதனையடுத்து மோடிக்கு எதிராக தங்களை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், தங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகள் தான் என கூறி அதிர்ச்சியளித்தார்.
இதனை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் காரி துப்பும் வகையில் வார்த்தையை அந்த ட்வீட்டில் பதிவிட்டு, யாரை குறிப்பிட்டு இந்த வார்த்தையை பதிவிட்டுள்ளார் என்பது தெரியாமல் குழம்பியுள்ளது அரசியல் வட்டாரம்.