நடிகை பானுபிரியா குடும்பத்தின் மீது பாலியல் தொல்லை புகார்!. சிறுமி மீது வழக்கு பதிவு!!

நடிகை பானுபிரியா குடும்பத்தின் மீது பாலியல் தொல்லை புகார்!. சிறுமி மீது வழக்கு பதிவு!!



actress banupriya case

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர்  நடிகை பானுப்பிரியா. இவர் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார். அவர் தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி புகார் வந்தது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாவதி என்பவர், சமல்கோட்டா பகுதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

actress banupriya

அந்த புகாரில். பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 15 வயது சிறுமிக்கு அவர் ஒராண்டிற்கும் மேலாக சம்பளம் கொடுக்கவில்லை என்றும், பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் அந்த சிறுமியின் தாயார் புகாரில் கூறியிருந்தார்.

சினிமாத்துறையில் நல்ல பெயரை வைத்திருக்கும் நடிகை பானுபிரியாவின் மீது ஏற்பட்டது வீண்பழி என்றும் ரசிகர்கள் கூறிவந்தனர். இந்தநிலையில் பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புகார் ஒன்றை அளித்தனர்.

அந்த புகாரில் சிறுமி வீட்டில் பணிபுரியும் போது நகை, பணம், ஐபேட், கேமரா, வாட்ச் எடுத்து சென்றுவிட்டதாகவும் இதைக் கண்டுபிடித்து பொருட்களை திரும்ப ஒப்படைக்க சிறுமியின் தாயாரிடம் கூறியதாகவும், அதற்கு அவர் தனது மகள்தான் நகை மற்றும் பணத்தை எடுத்து தன்னிடம் கொடுத்தாக தெரிவித்தார்.

    actress banupriya

நகைகள் மற்றும் பணம் ஆந்திராவில் இருப்பதாக கூறி, அவற்றை கொண்டு வந்து திருப்பி கொடுத்துவிடுகிறேன், அதன் பின் என் மகளை அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் திரும்பி வராமல் வீண் பழி சுமத்தியுள்ளார். இதனால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டுத் தரும்படி குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து பானுப்பிரியா புகாரை ஏற்றுக்கொண்டு போலீசார் அந்த சிறுமியின் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.