வெட்கத்தில் தலைகுனிந்த அபிராமி! காதல் உருகஉருக என்ன வார்த்தை கூறியுள்ளார் பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்!!

வெட்கத்தில் தலைகுனிந்த அபிராமி! காதல் உருகஉருக என்ன வார்த்தை கூறியுள்ளார் பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்!!



abirami-post-photo-with-cute-poet

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருவதால் இந்தமுறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் பெரும்  ஆவலுடன் காத்துள்ளனர். மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் தற்போது 6  பேர் மட்டுமே மீதம் உள்ளனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேறியவர் நடிகை அபிராமி. இதுவரை பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

abirami

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட இவர் முதலில் கவின் பின்னர் முகின் என மாறிமாறி காதல் வலையில் விழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் தெளிவாகி நிலையாக நின்றநிலையில் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். 

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போதும் வெட்கப்பட்டு தலைகுனிந்தது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு கண்கள் நிலம் நோக்கி உன் வருகைக்காக என் காத்திருப்பு" என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.