ஆடுஜீவிதம் படத்திற்காக உண்ணாவிரதம் இருந்து, உடலை வருத்தி நடித்த பிரித்விராஜ்; இயக்குனரின் ஷாக் தகவல்.!

ஆடுஜீவிதம் படத்திற்காக உண்ணாவிரதம் இருந்து, உடலை வருத்தி நடித்த பிரித்விராஜ்; இயக்குனரின் ஷாக் தகவல்.!



Aadujeevitham Movie Prithviraj Naked Scene Making Shared by Director 

 

மலையாள இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில், கோட் லைப் (Goatlife) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம் (Aadujeevitham). இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்திருந்தார். 

வெளிநாடு வேலைக்கு சென்று ஆடு மேய்க்கும் பணியை மேற்கொள்ளும் நபர் எதிர்கொள்ளும் துயரை அடிப்படையாக கொண்டு படம் வெளியாகி இருந்தது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியாகியுள்ளது. 

படத்தில் ஒவ்வொரு காட்சியும் வெளிநாடு சென்று வந்தோரின் வாழ்வை திரும்பி பார்க்க வைப்பதால், படம் பலரின் மனதில் ஒன்றிவிட்டது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், படத்தில் இடம்பெற்ற நிர்வாண காட்சி குறித்த தகவலை தெரிவித்தார்.

அக்காட்சியில் நடிக்க, பிரித்விராஜ் 3 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்துள்ளார். இறுதியாக படப்பிடிப்பு நடத்தும் நாளில், தனது உடலில் இருந்த நீரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி நடித்துள்ளார். 

தனது அறையில் இருந்து அவரை சேரில் வைத்து படக்குழு தூக்கி வந்து அமர வைத்து படமாக்கி இருக்கிறது. முழு உடல் பலவீனத்துடன் தத்ரூபமாக நடிக்க பிரித்விராஜ் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.