வாலிபருக்கு முத்தம் கொடுத்த இளம்பெண்!. 6 மாதம் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்த கோர்ட்..!

வாலிபருக்கு முத்தம் கொடுத்த இளம்பெண்!. 6 மாதம் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்த கோர்ட்..!


The court sentenced the young girl who kissed the boy to 6 months imprisonment

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு திருட்டு, விபசாரம் உள்ளிட்ட குற்றங்களை செய்தால் அவரது கைகளை துண்டிப்பது, பொது இடத்தில் நிறுத்தி வைத்து கல்லால் அடித்து மரண தண்டனை வழங்குவது என்று தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒயிட் நைல் என்ற மாகாணத்தில், திருமணமாகி விவாகரத்தான 20 வயது இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இளம்பெண் தனது காதலருடன் நெருக்கமாக இருந்த இளம்பெண், அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் உறவினர், அந்த வாலிபரை கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து திருமணத்துக்கு பின்பு கணவர் அல்லாத மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருந்தத குற்றத்துக்காக இளம்பெண் மீது விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட ஒயிட் நைல் மாகாண நீதிமன்றம், இளம்பெண்ணை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்ததால், மரண தண்டனை வாபஸ் பெறப்பட்டதுடன் இளம்பெண் மீதான வழக்கு மறுவிசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இளம்பெண் தனது காதலரை முத்தமிட்டதை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.