கணவரை இழந்த இந்து பெண் கற்பழிக்கப்பட்டு, தலை, மார்பகம் துண்டித்து பாகிஸ்தானில் கொலை.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
கணவரை இழந்த இந்து பெண் கற்பழிக்கப்பட்டு, தலை, மார்பகம் துண்டித்து பாகிஸ்தானில் கொலை.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணம், சின்ஜிஹரோ பகுதியை சேர்ந்த இந்து பெண்மணி தயா பெல் (வயது 40). இவர் கணவரை இழந்து வாழ்ந்து வரும் பெண்மணி ஆவார்.
இந்நிலையில், சம்பவத்தன்று தனது விவசாய நிலத்திற்கு சென்ற பெண்மணி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை தேடி அலைந்தபோது அவரின் சடலம் மீட்கப்பட்டது.
அவரின் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டவாறு மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணின் கொலை தொடர்பான சம்பவத்திற்கு மத்திய அரசு பாகிஸ்தான் அரசை எச்சரித்து இருக்கிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் கோரிக்கை வைத்துள்ளது.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.