புறப்பட்ட சில நிமிடங்களில் வீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய விமானம்! அப்போ நடந்த ஒரு அதிஷ்டம்! ஆனால் 2 பேர் நொடியில் சாம்பலான அவலம்..!!!
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் உள்ள அக்ரான் நகரில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடந்த இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். வீட்டில் இருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்
தகவலின்படி, அக்ரான் ஃபல்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பைப்பர் பிஏ-28 வகை சிறிய விமானம், நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அதன்பின் கேன்டர்பரி சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதி நொறுங்கியது.
விமானம் மோதி விழுந்த உடனே வீடும் விமானமும் தீப்பற்றி எரியத் தொடங்கின. அப்பகுதியில் கரும்புகை பரவியதால் மக்கள் பதற்றமடைந்தனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொத்து கொத்தாக பலி.. அதிர்ச்சி சம்பவம்.!
வீட்டில் இருந்த குடும்பம் உயிர் தப்பியது
விபத்து நேரத்தில் அந்த வீட்டில் தம்பதியினரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. தீ வேகமாக பரவிய நிலையில் அவர்கள் பாதுகாப்பாக வெளியேறியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
ஆனால் விமானத்தில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களின் அடையாள விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
விசாரணையில் அமெரிக்க அதிகாரிகள்
இதையடுத்து மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இந்த விமான விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து விசாரணையை தொடங்கியுள்ளன. விமானம் ஏன் கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து தீவிரமாக ஆய்வு நடைபெற்று வருகிறது.