நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
26,000 அடி உயரத்தில் கட்டுக்கடங்காமல் வந்த தண்ணீர்....! நொடியில் நீரில் ஊறிய ஊர்கள்..! 160 உடல்கள் மீட்பு,750 பேர் மாயம்... பேரதிர்ச்சி உண்டாக்கும் பெரும் சோகம்!!!
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் ஏரி உடைந்து பெருக்கெடுத்த நீர் நேபாளத்தின் கோஷி ஆற்றில் கலந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் ரசுவா, டாடிங் மாவட்டங்களில் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை திபெத்தில் 3 பேரும், நேபாளத்தில் 157 பேரும் என மொத்தம் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 133 இந்தியர்கள் உட்பட சுமார் 750 பேர் மாயமாகியுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திபெத் பகுதியில் 26,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்த ஏரி உடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்டுக்கடங்காமல் வெளியேறிய நீர் ஆற்றில் கலந்து வேகமாக பாய்ந்தது. வெள்ளத்தின் தாக்கத்தில் 20-க்கும் மேற்பட்ட பாலங்கள், சாலைகள் மற்றும் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தின் பல பகுதிகளில் கடும் சேதம்
ரசுவா மற்றும் டாடிங் மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் பல பகுதிகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் சிக்கியவர்களை விரைவாக மீட்பதில் சவால் நீடிக்கிறது.
இதனிடையே, நேபாள பெருவெள்ளம் காரணமாக காணாமல் போனவர்களை தேடும் பணியில் நேபாள ராணுவம் களமிறங்கியுள்ளது. 15-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
133 இந்தியர்கள் மாயம்; 57 தமிழர்கள் சிக்கினர்
வெள்ளத்தில் மாயமானவர்களில் 133 பேர் இந்தியர்கள். அவர்களில் சுற்றுலா சென்ற 57 தமிழர்களும் அடங்குவர். அவர்களின் நிலை குறித்து உறவினர்கள் கவலையில் உள்ள நிலையில், இந்திய அதிகாரிகளும் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட நேபாள ராணுவ வீரர்களும் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேடுதல் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியர்கள் மீட்பு பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, மாயமானவர்களின் நிலவரத்தை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.