ஒரே வீட்டில் 20 வருஷமாக மனைவியிடம் பேசாமல் இருந்த கணவர்! அவர் சொன்ன அந்த ஒரு காரணம்.... நெட்டிசென்கள் அதிர்ச்சி.!!!



japan-couple-breaks-20-year-silence

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் ஜப்பான் தம்பதியினர் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருந்தும் ஒருவருடன் ஒருவர் பேசாமல் வாழ்ந்த சம்பவம் மீண்டும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அவர்களது இளைய மகனின் முயற்சியால், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு கணவர் தனது மனைவியுடன் மீண்டும் பேசிய தருணம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

20 ஆண்டுகள் நீண்ட மௌனம்

ஒகுவோ கடாயாமா மற்றும் யும்பி தம்பதியினர் கடந்த 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், கணவர் மனைவியுடன் நேரடியாகப் பேசுவதை முற்றிலும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவி ஏதேனும் கேட்டால் தலையசைப்பது அல்லது இருமுவதன் மூலம் மட்டுமே பதில் அளிப்பது அவரது வழக்கமாக இருந்தது. இதனால், பெற்றோர் ஒருவருடன் ஒருவர் பேசுவதைக் கூட பார்த்திராத 18 வயது இளைய மகன், ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் உதவியை நாடியுள்ளார்.

இதையும் படிங்க: 7 வருடமாக இல்லாத அந்த பாக்கியம்! திடீரென ஒருநாள் மருமகனால் கிடைத்தது.. முறைதவறிய உறவால் இரவில் நடந்த அந்த விஷயம்! அதிர்ச்சி சம்பவம்!!!

பூங்காவில் உடைந்த மௌனம்

தொலைக்காட்சி நிகழ்ச்சி குழுவினர், தம்பதியினர் முதன்முதலில் சந்தித்த பூங்காவிற்கே அவர்களை அழைத்து வந்தனர். அப்போது இத்தனை ஆண்டுகள் ஏன் பேசவில்லை என்று கேட்டபோது, தனது மனைவி குழந்தைகள் மீது அதிக அன்பும் கவனமும் செலுத்தியதால் ஏற்பட்ட பொறாமை மற்றும் கோபமே காரணம் என்று ஒகுவோ கடாயாமா சிரித்தபடியே தெரிவித்துள்ளார்.

அதன்பின், “இத்தனை ஆண்டுகளாக குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொண்டாய். அதற்காக உனக்கு என் நன்றிகள்” என்று மனைவியிடம் உருக்கமாகப் பேசிய அவர், 20 ஆண்டுகளாக நீடித்த தனது மௌனத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

மீண்டும் வைரலாகும் குடும்பக் கதை

குடும்ப உறவுகள், அன்பு மற்றும் புரிதல் குறித்து பேசப்படும் போதெல்லாம் இந்த Viral News சம்பவம் மீண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மனைவியின் கவனத்திற்காக தனது சொந்தக் குழந்தைகளிடமே பொறாமை கொண்டதாக கணவர் கூறிய காரணம், பலருக்கு ஆச்சரியத்தையும் புன்னகையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: 10 வருஷமா அது இல்லாமல் நான் தனியாக தான் இருக்கேன்....! என் குழந்தைகளை விட அது முக்கியம் இல்ல... சீக்ரெட்டை போட்டு உடைத்த ஏஞ்சலினா ஜூலி..!!,