குடை மிளகாயை நறுக்கிய போது உள்ளே உயிருடன் இருந்த தவளை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
குடை மிளகாயை நறுக்கிய போது உள்ளே உயிருடன் இருந்த தவளை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
உணவுக்காக வெட்டப்பட்ட குடை மிளகாயில் தவளை ஓன்று குடியிருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கன்னடா நாட்டை சேர்ந்த காஃனோன் என்ற பெண்மணி கடந்த 9 ஆம் தேதி அன்று இரவு உணவை சமைப்பதற்காக சமயலறைக்குள் சென்றுள்ளார்.
சமைப்பதற்கான அணைத்து பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு, தனது வீட்டில் இருந்த குடை மிளகாய் ஒன்றை எடுத்து வெட்டியுள்ளார். மிளகாயை வெட்டிய அடுத்த கணமே காஃனோன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணாம், அந்த மிளகாய் உள்ளே தவளை ஓன்று உயிருடன் குடியிருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காஃனோன் இதுகுறித்து அந்நாட்டு விவசாய துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தவளை இருந்த மிளகாயை காஃனோன் புகைப்படமாக எடுத்து அதனை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு உலகளவில் வைரலாகிவருகிறது.