8 வயதில் 80 வயது பாட்டி போன்ற தோற்றம்..! அரியவகை நோயினால் உயிர் இழந்த 8 வயது சிறுமி.
8 வயதில் 80 வயது பாட்டி போன்ற தோற்றம்..! அரியவகை நோயினால் உயிர் இழந்த 8 வயது சிறுமி.
ஒருவகை அறிய நோயினால் 8 வயது சிறுமி ஒருவர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர், இவானா. இவருக்கு, அன்னா சாகிடோன் என்ற பெண் குழந்தை இருந்தது. உலகில் இதுவரை 160 பேரை மட்டுமே தாக்கியுள்ள, புரோஜீரியா என்ற மரபணு நோய் அன்னா சாகிடோனை தாக்கியுள்ளது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவயதில்லையே முதுமையான தோற்றத்துக்கு மாறுவார்கள். அந்த வகையில், 8 வயதே ஆன அச்சிறுமி, 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்படுவந்த சிறுமியின் உடல் உள் உறுப்புகள், அடுத்தடுத்து செயலிழந்தன.
இதனால், தீவிர சிகிச்சை வழங்கியும் மருத்துவர்களால் அந்த அந்த குழந்தையை காப்பாற்றமுடியவில்லை. உலகிலையே முதுமை காரமனாக உயிர் இழந்த சிறுமி அன்னா சாகிடோன் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.