லாக்டவுனை சமாளிக்க வாட்ஸ்-ஆப்பில் புதிய சலுகை - குரூப் காலிங்கில் கட்டுப்பாடுகள் தளர்வு!
லாக்டவுனை சமாளிக்க வாட்ஸ்-ஆப்பில் புதிய சலுகை - குரூப் காலிங்கில் கட்டுப்பாடுகள் தளர்வு!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் சமயத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் குரூப் காலிங்கிற்கான நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்-ஆப் நிறுவனம் பார்வோர்டு மெஸேஜுக்கான எண்ணிக்கையை குறைத்துள்ளது. தற்போது வீட்டிலே இருப்பவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் ஒரே நேரத்தில் பேச கூடிய குரூப் காலிங்கில் விதிமுறைகளை தளர்த்துள்ளது.
அதாவது வாட்ஸ்-ஆப் குரூப் காலிங்கில் இதுவரை ஒரே சமயத்தில் 4 நபர்கள் மட்டுமே பேச அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டுப்பாடினை தளர்த்து கூடுதல் நபர்களை இணைக்கும் வசதியை வாட்ஸ்-ஆப் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வசதியால் IOS பயனாளர்கள் ஒரு சமயத்தில் 8 பேருடன் குரூப் காலிங்கில் பேசலாம். ஆண்ட்ராய்டு பயனாளர்கள் அதிகபட்சமாக 5 பேருடன் குரூப் காலிங்கில் பேசலாம்.
தற்போது இந்த புதிய வசதியானது வாட்ஸ்-ஆப் பீட்டா வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிகள் விரைவில் வாட்ஸ்-ஆப்பின் முதன்மை வெர்ஷனில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.