8 பக்க தற்கொலை கடிதம்! ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி 9-வது மாடியில் இருந்து குதித்த 3 சகோதரிகள்! கடிதத்தில் கண்டுபிடித்த அதிர்ச்சி தகவல்கள்!
உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு துயரமான சம்பவம், ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனம் எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது. சிறுவயதிலேயே மனநிலை பாதிக்கப்பட்ட மூன்று சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஜியாபாத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஜியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து பாகி (12), பிராச்சி (14) மற்றும் விஷிகா (16) ஆகிய மூன்று சகோதரிகள் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் எழுதிய 8 பக்க தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்டது.
கொரிய கலாச்சார மோகம் மற்றும் ஆன்லைன் விளையாட்டு
அந்தக் கடிதத்தில், கொரிய கலாச்சாரம் மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பும், குறிப்பாக கொரிய ஆன்லைன் டாஸ்க் விளையாட்டு ஒன்றின் தாக்கமும் வெளிப்பட்டது. அந்த விளையாட்டு தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான சவால்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இப்படி ஒரு சம்பவமா? நீதான் என் முதல் மனைவி! கடிதம் எழுதிவிட்டு கணவன் காதலியுடன் செய்த அதிர்ச்சி சம்பவம்!
கோவிட் காலத்தில் தொடங்கிய அடிமைத்தனம்
சிறுமிகளின் தந்தை கூறுகையில், கோவிட்-19 பொதுமுடக்கக் காலத்தில் வீட்டிலேயே இருந்தபோது இந்த அடிமைத்தனம் தொடங்கியதாக தெரிவித்தார். அவர்கள் பள்ளிக்குச் செல்லுவதை நிறுத்தி, கொரிய பெயர்களை வைத்துக்கொண்டு விளையாட்டின் விதிகளின்படி வாழத் தொடங்கியுள்ளனர்.
‘கொரியாதான் எங்கள் வாழ்க்கை’ – கடிதத்தில் உருக்கம்
தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய கடிதத்தில் “கொரியாதான் எங்கள் வாழ்க்கை” என்று குறிப்பிட்டிருந்தது அனைவரையும் உலுக்கியுள்ளது. இது சிறுவர் மனநலம் மீது டிஜிட்டல் உலகம் ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூகத்திற்குப் பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை கவனமாக கண்காணித்து, அவர்களின் மனநலத்திற்குப் பாதுகாப்பளிப்பது இன்றைய காலத்தின் அவசியமாகியுள்ளது.