காதலியை நிர்வாணமாக்கி பதிவு செய்த காதலன்! வாட்சப் காலால் கதிகலங்கிய இளம்பெண்!!

சென்னையில் வசித்து வரும் 25 வயதுடைய திலீப் குமார் என்பவர் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த இளம் பெண் இவரை விட்டு விலக முயற்சி செய்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திலீப் குமார் அந்த பெண்ணிடம், ஒரே முறை வீடியோ காலில் நிர்வாணமாக வந்தால் இனிமேல் உன்னை தொல்லை செய்ய மாட்டேன், என்னை விட்டு விலகி சென்று விடலாம் என்று நைசாக பேசியுள்ளார்.
இதனால் அந்த பெண்ணும் இளைஞன் கூறியவாரே வீடியோ காலில் தோன்றியுள்ளார். இதனை பதிவு செய்த திலீப் குமார் அப்பெண்ணை மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.
இதனால் அந்த இளம்பெண் திலீப் குமார் மீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த திலீப் குமார் தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து திலிப் குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.